புதுச்சேரி

மேல் சட்டையின்றி வீட்டில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி முன்பு ரங்கசாமி- வைரலாக பரவும் புகைப்படம்

Published On 2022-08-13 06:28 GMT   |   Update On 2022-08-13 06:28 GMT
  • கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு மாடியில் 2 தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.
  • போலீசார் வழக்கம் போல் ஒரு தேசியகொடியை ஏற்றியுள்ளனர். அங்கன்வாடி மூலம் கொடுத்த கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி புதுவையில் பல வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு மாடியில் 2 தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. போலீசார் வழக்கம் போல் ஒரு தேசியகொடியை ஏற்றியுள்ளனர். அங்கன்வாடி மூலம் கொடுத்த கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

இதனை இன்று காலை பால்கனிக்கு மேல்சட்டையின்றி கைலியுடன் வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.

இதனை படமெடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் படம் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News