புதுச்சேரி

கைதிகள் மன அழுத்தத்தை குறைக்க இசை நிகழ்ச்சி

Published On 2024-01-08 07:14 GMT   |   Update On 2024-01-08 07:14 GMT
  • பாடலுக்கு கைதிகள் நடனமாடினர்.
  • நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் கைதிகளோடு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

புதுச்சேரி:

காலாப்பட்டு சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் மறுவாழ்வுக்காக சிறை நிர்வாகம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் மன அழுத்தம் குறைக்க பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சமீபத்தில் சிறைக்கு வந்து சென்ற நடிகர் பார்த்திபன், சிறை கைதிகள் மன அழுத்தம் குறைக்க இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார்.

அதன்படி, பார்த்திபன் மனித நேய மன்றம் சார்பில், காலாப்பட்டு சிறையில் இசை நிகழ்ச்சி நடந்தது.

இதில், பாடகர்கள் ஸ்ரீராம், சபிதா, தந்தை பிரியன் உட்பட பலர் கலந்து கொண்டு பாடல் பாடி அசத்தினர். பாடலுக்கு கைதிகள் நடனமாடினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறை தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தனர். பாடகர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் கைதிகளோடு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

Tags:    

Similar News