புதுச்சேரி
null
சரியாக பணிக்கு வராத புதுவை அரசு ஊழியர்கள் 400 பேருக்கு நோட்டீஸ்
- சுகாதாரத்துறையில் ஊழியர்கள் வருகையை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
- சரியான நேரத்தில் பணிக்கு வராத 400 அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள 54 துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை.
பணி நேரத்தில் இருக்கையில் இருப்பதில்லை. இதையடுத்து நிர்வாக சீர்திருத்த துறை தனிப்படை அமைத்து கடந்த மாதம் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்கிறது. சுகாதாரத்துறையில் ஊழியர்கள் வருகையை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
இதில் 90 சதவீத ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் பணியில் இருந்தனர். அங்கிருந்த பதிவேட்டை கைப்பற்றிய தனிப்படையினர் பணிக்கு வராதவர்கள் பட்டியலை எடுத்தனர். இதுவரை 25 அரசு துறைகளில் வருகை பதிவை தனிப்படை ஆய்வு செய்து சரியான நேரத்தில் பணிக்கு வராத 400 அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.