புதுச்சேரி

காரைக்காலில் டிச.20-ந்தேதி உள்ளூர் விடுமுறை

Published On 2023-12-15 09:44 GMT   |   Update On 2023-12-15 09:44 GMT
  • இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது.
  • லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரைக்கால்:

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. அப்போது சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.

இந்நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் வரும் 20-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News