புதுச்சேரி

ஒரே நேர்கோட்டில் 4 கிரகணங்கள்- ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழல் : பிரபல ஜோதிடர் கணிப்பு

Published On 2024-05-23 07:40 GMT   |   Update On 2024-05-23 07:40 GMT
  • தங்கத்தின் விலையில் மாற்றமாகி கொண்டு விலை ஏறிக்கொண்டே இருக்கும்.
  • நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்.

புதுச்சேரி:

சூரியன், புதன், குரு, சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 25-ந்தேதி புதன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

ஜூன் மாதம் 3-ந்தேதி திங்கட்கிழமை ஒரே நேர்கோட்டில் இந்த 4 கிரகணங்களும் வருகிறது. இந்த நேர்கோட்டு கிரகணங்கள் அமைப்பால் ஜூன் 9-ந் தேதி வரை பலன்கள் கிடைக்கும்.

இந்த 4 கிரகணங்கள் ஒரே நேர்கோட்டு அணிவகுப்பால் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. அதே போல் சில பாதிப்புகளும் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியதாவது:-

சூரியன், புதன், குரு, சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றனர். இந்த 4 கிரகணங்களும் ஒரே வீட்டில் இருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு போட்டியான காலமாக இது அமைகிறது.

இந்த கிரகணங்களின் நேர் கோட்டு சஞ்சரிப்பு ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தரும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகணங்கள் பெயர்ச்சி ஆவது போல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களின் இடமாறுதல் பெயர்ச்சியும் உண்டாகலாம்.

வெயில் தாக்கம் அதிகரிக்கும். தென்மேற்கு பருவமழை நிதானமாக உற்பத்தியாகி வெயில் தாக்கத்தை குறைக்கும். ஜூன் 15-ந் தேதிக்கு மேல் வெயிலின் உக்கிரம் குறையும். மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கல்வி படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.


பொதுவாக சிலருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏற்படும். தங்கத்தின் விலையில் மாற்றமாகி கொண்டு விலை ஏறிக்கொண்டே இருக்கும். நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்.

கேதார்நாத், பத்ரிநாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். கேதார்நாத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும். பத்ரிநாத்தில் உறைபனி ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News