புதுச்சேரி

 பிம்ஸ் செவிலியர் கல்லூரியில் செவிலியர் உறுதி மொழி நிகழ்ச்சியினை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

Published On 2022-08-02 03:54 GMT   |   Update On 2022-08-02 03:54 GMT
  • செவிலியர் கல்லூரியில் 18-வது பிரிவு செவிலியர் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பிம்ஸ் நிர்வாகக் குழு முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி, பிம்ஸ் செவிலியர் கல்லூரியில் 18-வது பிரிவு செவிலியர் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பிம்ஸ் நிர்வாகக் குழு முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் மோனி முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேனு வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் ஜெய்சங்கரி தலைமையில் மாணவ-மாணவிகள் செவிலியர் பணிக்கு தங்களை அர்ப்பணித்து, மெழுகு வர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். திருநெல்வேலி அல்மை ட்டி செவிலியர் கல்லூரி முதல்வர் ரெபேக்கா முதன்மை உரையாற்றினார்.

மருத்துவ மற்றும் செவிலியர் துறை பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் வருண்பாபு நன்றி கூறினார்.

Tags:    

Similar News