புதுச்சேரி

புத்தக பையுடன் பாரதி பூங்காவில் சுற்றி திரிந்த மாணவர்கள்.

வகுப்புகளுக்கு செல்லாமல் பூங்காவில் சுற்றிய மாணவர்கள்

Published On 2022-09-15 14:15 IST   |   Update On 2022-09-15 14:15:00 IST
  • சமீபகாலமாக மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் பூங்காவுக்குள் வந்து புகைப்பிடிப்பது மற்றும் உறங்குவது , சுற்றுலா பயணிகளை கிண்டல்செய்வது என தொடர்கிறது.
  • நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் அவ்வப்போது ரோந்து வந்து மாணவர்களை விரட்டியடித்து வந்தனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபை, கவர்னர் மாளிகை மையத்தில் பாரதி பூங்கா உள்ளது.

இங்கு வேளையில் மக்கள் நடை பயிற்சி செல்வர். சுற்றுலா பயணிகள் வந்து குழந்தைகளோடு விளையாடி மகிழ்வர்.

சமீபகாலமாக மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் பூங்காவுக்குள் வந்து புகைப்பிடிப்பது மற்றும் உறங்குவது , சுற்றுலா பயணிகளை கிண்டல்செய்வது என தொடர்கிறது.

நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் அவ்வப்போது ரோந்து வந்து மாணவர்களை விரட்டியடித்து வந்தனர்.

இன்று 10 மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புத்தக பையுடன் பூங்காவில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்தனர். தகவலறிந்த பெரியகடை போலீசார் விரைந்து வந்து அனைவரையும் விரட்டி பிடித்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

அனைவரும் அரசு பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து அவர்களை அந்தந்த பள்ளியில் போலீசார் இறக்கி விட்டு பள்ளி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்தனர்.

பள்ளி நேரத்தில் மாணவர்கள் பூங்கா வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News