புதுச்சேரி

கோப்பு படம்.

மாநில அளவிலான திறனறிவு தேர்வு

Published On 2023-11-26 05:39 GMT   |   Update On 2023-11-26 05:39 GMT
  • 10-ந் தேதி நடக்கிறது
  • அறிவியல் விழிப்புணர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

புதுச்சேரி:

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்வில் புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த 1,800 பள்ளி மாணவர்கள் எழுதினர். இதில் 130 மாணவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.

மாநில அளவிலான திறனறிவு தேர்வு வருகிற 10-ந் தேதி புதுவை ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் தேசிய அளவிலான முகாமிற்கு தகுதி பெறுவார்கள். தேசிய அளவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.

தேர்வை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அருண் நாகலிங்கம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடத்துகின்றனர்.

Tags:    

Similar News