புதுச்சேரி

கோப்பு படம்.

மாநில தி.மு.க. அமைப்பாளராக சிவா எம்.எல்.ஏ. மீண்டும் தேர்வு

Published On 2023-03-14 09:37 GMT   |   Update On 2023-03-14 09:37 GMT
  • புதுவை மாநில தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
  • பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜ்மோகன், சேகர், முருகானந்தம், பிரபாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல் நடந்தது. 

இதில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. புதுவை மாநில தி.மு.க. அவைத்தலை வராக எஸ்.பி.சிவக்குமார், அமைப்பாளராக சிவா எம்.எல்.ஏ., துணை அமைப்பா ளர்களாக அனிபால் கென்னடி, தைரியநாதன், கல்யாணி, பொருளாளராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர்களாக சி.பி.திருநாவுக்கரசு, சண்.குமரவேல், பூ.மூர்த்தி, லோகையன், ஜேவிஎஸ்.ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி ஆகிய 7 பேரும், பொதுக்குழு உறுப்பினர்களாக ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், தர்மராஜன், ரவீந்திரன், செந்தில்வேலன், மாய கிருஷ்ணன், இளம்பரிதி, பழனி, பிரபாகரன், செந்தில்குமார், மாறன், கோபாலகிருஷ்ணன், கோபால், அமுதாகுமார், நர்கீஸ் ஆகிய 22 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்ட அவைத்தலைவராக மணிவண்ன், அமைப்பா ளராக நாஜிம், எம்.எல்.ஏ. துணை அமைப்பாளர்களாக காசி நாதன், முத்துகிருஷ்ணன், புவனேஸ்வரி, பொருளாளராக சங்கர், தலைமை செயற்குழு உறுப்பி னராக நாகதியாகராஜன், எம்.எல்.ஏ.

பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜ்மோகன், சேகர், முருகானந்தம், பிரபாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News