மாணவர்களுக்கு சிறப்பு பயிலரங்கம் நடந்த போது எடுத்த படம்.
மாணவர்களுக்கு சிறப்பு பயிலரங்கம்
- புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வேலைவாய்ப்பு துறை மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இணைந்து 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு எம்.ஐ.டி. கல்லூரியில் பயிலரங்கம் நடைபெற்றது.
- கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்புரை ஆற்றினார்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வேலைவாய்ப்பு துறை மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இணைந்து 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு எம்.ஐ.டி. கல்லூரியில் பயிலரங்கம் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தை எம்.ஐ.டி. கல்லூரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணைதலைவர், சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்புரை ஆற்றினார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன மேலாளர் கணேஷ் திருநாவுக்கரசு பயிலரங்கை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை சேர்ந்த ஹேமா பிரகாஷ் ரகு மற்றும் பாலாஜி ஆகியோர் பயிலரங்கை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர் மெய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.