புதுச்சேரி
சாய் பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்த காட்சி.
சாய் பாபா ஆலயத்தில் சிறப்பு பூஜை
- ஆலயத்தில் மாதத்தின் முதல் வியாழக்கி ழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது
- 12 விதமான அபிஷேகம் நடைபெற்றது
புதுச்சேரி:
கோரிமேடு அருகே பட்டானூர் சர்வ சக்தி படைத்த 108 மூலைகைகளால் அபிஷேக காப்பு பெற்ற கருடக் கருங்கல்லாலான 6 உயரம் உள்ள ஓம் வழிகாட்டும் சாய்பாபா ஆலயத்தில் மாதத்தின் முதல் வியாழக்கி ழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பஞ்சகாவியம், அரிசி மாவு, மஞ்சள் தூள், பால் தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் கரும்பு சாறு, சந்தனம், திருநீறு, பன்னீர் ஆகிய பொருட்களால் 12 விதமான அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் 108 மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மங்கள ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பாபா பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை ஆலய அறங்காவலர் சாய் சசி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.