புதுச்சேரி

கஞ்சா விற்ற பட்டதாரி என்ஜினீயர்களையும், அவர்களை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற பட்டதாரி வாலிபர்கள் 6 பேர் கைது

Published On 2022-08-09 08:34 GMT   |   Update On 2022-08-09 08:34 GMT
  • இந்த நிலையில் பாகூர் தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ‌ரகசிய தகவல் கிடைத்தது.
  • அதன்பேரில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் சென்று கண்காணித்து வந்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.ஆனாலும் தொடந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாகூர் தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ‌ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் சென்று கண்காணித்து வந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டைப்பைகளை சோதனை நடத்தினர்.

அப்போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். இதையடுத்து 3 பேரையும் பாகூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் தமிழக பகுதியான நெய்வேலியை சேர்ந்த சூர்யா (23), வசந்த (21), ஜெர்விஸ் (23) என தெரியவந்தது. மேலும் சூர்யா கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு 3 பேர் கொண்ட கும்பல் சென்னையில் இருந்து கோவைக்கு கிலோ கணக்கில் கஞ்சா எடுத்து செல்வது தெரியவந்தது.

இதையடுத்து சூர்யா மூலமாக போலீசார் மற்றும் 3 பேரை தொடர்பு கொண்டு கஞ்சா வாங்குவதுபோல் வரவழைத்து அந்த கும்பலை பொறிவைத்து பிடித்தனர்.

பின்னர் அந்த கும்பலிடமும் பாகூர் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கும்பலும் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் மோகன் (26), கோபால் (22), சந்துரு (23) என்பதும், ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து 6 கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.2.½ லட்சம் ஆகும்.கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் டிப்ளமோ, என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு விஷ்னுகுமார் பாராட்டினார்‌.

Tags:    

Similar News