புதுச்சேரி

கோப்பு படம்

இளம் பெண்ணிடம் சில்மிஷம்

Published On 2022-07-10 10:46 IST   |   Update On 2022-07-10 10:46:00 IST
  • பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா
  • ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்

புதுச்சேரி:

புதுவை கடற்கரைக்கு சுற்றுலா வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா (வயது24). இவர் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.

கடந்த 7-ந் தேதி சஞ்சனா தனது தோழிகளுடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவை காந்தி ரோட்டில் ஒரு தனியார் விடுதியில் தங்கிய அவர்கள் நவநாகரீக உடை அணிந்து கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர். டூப்ளக்ஸ் சிலை அருகே அவர்கள் நின்று கடல் அழகை ரசித்துக்கொண்டிருந்த போது ஒருவர் சஞ்சனாவின் உடல் அழகை வர்ணித்து கிண்டல் செய்தார்.

மேலும் சஞ்சனாவின் உடலின் பல இடங்களை தொட்டு சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சனா மற்றும் அவரது தோழிகள் அலறல் சத்தம் போட்டனர். இதையடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

இதைத்தொடர்ந்து சஞ்சனா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். அவர் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த மூர்த்தி(வயது59) என்பதும் இவர் புதுவை கடற்கரை சாலையில் யாசகம் எடுத்து ஜீவனம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News