புதுச்சேரி

அனிபால் கென்னடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் அகற்றம்-கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

Published On 2022-12-29 11:15 IST   |   Update On 2022-12-29 11:15:00 IST
  • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயத்துக்கு பின்புறம் கரோன் வீதி, ஷர்மோன் வீதியில் பாதாள கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி சாலையில் வழிந்தது.
  • இதையடுத்து தி.மு.க. மாநில துணை தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயத்துக்கு பின்புறம் கரோன் வீதி, ஷர்மோன் வீதியில் பாதாள கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி சாலையில் வழிந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் ஆலயத்துக்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை இருந்து வந்தது.

எனவே இதனை சுத்தம் செய்து தருமாறு அருட்தந்தை குழந்தைசாமி தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தி.மு.க. மாநில துணை தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து இதனை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சங்கர் கழிவுநீர் உறிஞ்சி எடுக்கும் வாகனத்தை வரவழைத்து அங்கிருந்த கழிவுநீரை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தார்.

பிறகு அங்கு கிருமிநாசினி, வாசனை திரவங்கள் தெளிக்கப்பட்டு மேற்கொண்டு கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆய்வின் போது தி.மு.க. மாநில இளைஞர் அணி ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ், கவுதமன், பாலாஜி, ரகுமான், லாரன்ஸ் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News