புதுச்சேரி
பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் பள்ளி குழந்தைகள்
- பாண்டி மெரினா கடற்கரை பொழுது போக்கு மையத்தில் சோழர் தர்பார் என்ற நிகழ்ச்சி நடந்தது.
- சில குழந்தைகளின் நடிப்பை மீண்டும் ஒருமுறை ஒன்ஸ்மோர் கேட்டு செய்ய சொல்லி கேட்டு பார்வையாளர்கள் ரசித்தனர்.
புதுச்சேரி:
பாண்டி மெரினா கடற்கரை பொழுது போக்கு மையத்தில் சோழர் தர்பார் என்ற நிகழ்ச்சி நடந்தது.
சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த தர்பார் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான பொன்னிய செல்வன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, பூங்குழலி, வானதி, ஆழ்வார்க்கு அடியார், பழுவேட்டரையர் உள்ளிட்ட பல பாத்திரங்கள் ஒப்பனையில் தோன்றினர்.
குழந்தைகள் மழலைத் தமிழில் பேசிநடித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சில குழந்தைகளின் நடிப்பை மீண்டும் ஒருமுறை ஒன்ஸ்மோர் கேட்டு செய்ய சொல்லி கேட்டு பார்வையாளர்கள் ரசித்தனர்.