புதுச்சேரி
பா.ஜனதா சார்பில் மரக்கன்று நடும் விழா
- முதலியார்பேட்டை பா.ஜனதா சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
- புதுவை முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
பா.ஜனதா அரசின் 8 ஆண்டு நிறைவு விழாவையொட்டி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுவை முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
முதலியார்பேட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நைனார் மண்டபம் கிளை எண் 20-ல் முன்னாள் கவுன்சிலர் மற்றும் முதலியார்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான செல்வகணபதி தலைமை யில், தொகுதி தலைவர் இன்பசேகர் முன்னிலையில், தொகுதி துணை தலைவர் விஜயகுமார் ஏற்பாட்டின் பேரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கவுன்சிலர் மற்றும் வணிகப் பிரிவின் மாநில தலைவர் சத்யராஜ், கிளை தலைவர் இளஞ்செழியன், தொகுதி நிர்வாகிகள் சுதாகர், முருகன், சரவணன், மணி ராஜா, உதய சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.