புதுச்சேரி

மரக்கன்று நடும் விழா நடை பெற்ற காட்சி.

null

மரக்கன்று நடும் விழா

Published On 2022-07-03 04:33 GMT   |   Update On 2022-07-03 08:34 GMT
  • புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
  • அழிந்து வரும் மரங்களில் ஒன்றான ஆலமரம், இலுப்ப மரம், நாவல் மரம் ஆகிய மரக்கன்றினை, இயக்குனர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், டாக்டர் தியாகராஜன் ஆகியோர் நட்டனர்.

புதுச்சேரி:

புதுவை பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பொதுநல சமூக பேரவையின் சார்பில் உலக மருத்துவர் தினம் மற்றும் வன மகோத்சவம் விழாவையொட்டி புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

நிகழ்ச்சியில் அழிந்து வரும் மரங்களில் ஒன்றான ஆலமரம், இலுப்ப மரம், நாவல் மரம் ஆகிய மரக்கன்றினை, இயக்குனர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், டாக்டர் தியாகராஜன் ஆகியோர் நட்டனர். விழாவில் பேரவையின் நிர்வாகி சிவா, சுரேஷ், மருத்துவமனை ஊழியர்கள், பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News