புதுச்சேரி
சுகாம்பிகை அம்மன் கோவிலில் சாமி வீதி உலா - சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- சுகாம்பிகை அம்மன் கோவிலில் 94-ம் ஆண்டு ஆடிப் பெருவிழா நடை பெற்று வருகின்றது.
- அதன் ஒரு பகுதியாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் பள்ளிகொண்ட பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி
புதுவை உருளையன் பேட்டை, ஒத்தவாடை வீதியில் அமைந்துள்ள சுகாம்பிகை அம்மன் கோவிலில் 94-ம் ஆண்டு ஆடிப் பெருவிழா நடை பெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் பள்ளிகொண்ட பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா, தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழா ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் சக்திவேல், கோகுல்ராஜ், ராமமூர்த்தி, கருணாகரன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பலராமன், ஆளவந்தார், ராஜா, ராஜீ, ரவி, நாகராஜ், ஆனந்த், பிரவீன், சரவணன், மணி, மகளிரணி சந்திரா, உமா, கலைச்செல்வி உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.