புதுச்சேரி

கோப்பு படம்.

ரெயில்வேயில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்

Published On 2023-06-04 05:55 GMT   |   Update On 2023-06-04 05:55 GMT
  • கம்யூனிஸ்டு (எம்.எல்) வலியுறுத்தல்
  • உயரிய பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்ட்டு (எம்.எல்) மாநில செயலாளர் புருஷோத்தமன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா கோர ரெயில் விபத்து பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததாலும் ஊழியர் பற்றாக்குறையாலும் ஏற்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்கு மோடி அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சகம் முழு பொறுப்பேற்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட, ரெயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கைவிட்டு, உயரிய பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News