புதுச்சேரி

சாலை பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

ரூ.1½ கோடி செலவில் சாலை பணி

Published On 2023-01-03 09:13 GMT   |   Update On 2023-01-03 09:13 GMT
  • சாலை பணியை சபாநாயகர் ஏம்பலம்அ செல்வம் தொடங்கி வைத்தார்.
  • இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

மணவெளி தொகுதி அபிஷேகபாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் சாலை பணியை சபாநாயகர் ஏம்பலம்அ செல்வம் தொடங்கி வைத்தார்.

 பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதி அபிஷேக பாக்கம் கிராமத்தில் தெப்பக்குளம் விதி, வீரன் கோவில் வீதி, பழைய டி.என். பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் சாலைகளை ரூ.1.44 கோடி மதிப்பில் தார் சாலையாக அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் கள் நாகராஜ், சரஸ்வதி, ரகுராமன் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்களான பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, பொதுச் செயலாளர் சக்திபாலன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், மாயகிருஷ்ணன் ஹேமமாலினி, மாறன், முருகன், ஜானகிராமன், கதிரேசன், ராமகிருஷ்ணன், உமா, தவளக்குப்பம் வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News