புதுச்சேரி
சாலை மேம்பாட்டு பணி - செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ரூ. 28 லட்சம் செலவில் தார் சாலை, இருளஞ்சந்தை பேட் சுடுகாட்டு சாலை ரூ. 7 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
- செந்தில்குமார்எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாட்கோ மூலமாக பாகூர் வார்க்கால் ஓடை கிராமத்தில் ரூ. 28 லட்சம் செலவில் தார் சாலை, இருளஞ்சந்தை பேட் சுடுகாட்டு சாலை ரூ. 7 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
செந்தில்குமார்எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முகுந்தன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.