புதுச்சேரி

சாலை மேம்பாட்டு பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

சாலை மேம்பாட்டு பணி - செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-07-21 08:58 GMT   |   Update On 2022-07-21 08:58 GMT
  • ரூ. 28 லட்சம் செலவில் தார் சாலை, இருளஞ்சந்தை பேட் சுடுகாட்டு சாலை ரூ. 7 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
  • செந்தில்குமார்எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாட்கோ மூலமாக பாகூர் வார்க்கால் ஓடை கிராமத்தில் ரூ. 28 லட்சம் செலவில் தார் சாலை, இருளஞ்சந்தை பேட் சுடுகாட்டு சாலை ரூ. 7 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.

செந்தில்குமார்எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முகுந்தன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News