புதுச்சேரி
வாய்க்கால் அடைப்புகள் அகற்றம்-கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டையில் உள்ள ப வடிவ வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் இருந்தது.
- உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டையில் உள்ள ப வடிவ வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் இருந்தது. இது குறித்து உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவயிடத்திற்கு உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகம், ஆய்வாளர்கள் ரவிக்குமார்,ஆரோக்கியம், மேஸ்திரி கொலோவிஸ் ஆகியோர் துப்புரவு பணியாளர்ளுடன் வந்து வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்தனர்.
இதில் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசீர், அவுட் ரவி, கணேசன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.