புதுச்சேரி

தாழ்வான மின் கம்பிகள் அகற்றம்-கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

Published On 2023-01-10 10:39 IST   |   Update On 2023-01-10 10:39:00 IST
  • உப்பளம் தொகுதி க்குட்பட்ட உடையார் தோட்டத்தில் உயர் மின்கம்பிகள் பொதுமக்கள் வசிக்கும் வீட்டிற்க்கு மேலே தாழ்வான நிலையில் தளர்ந்து இருப்பததால் 2 பேர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
  • 2 நாட்களில் தாழ்வான மின்கம்பிகளை சரிசெய்து தருவதாக செயற்பொறியாளர் உத்தரவாதம் அளித்தார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி க்குட்பட்ட உடையார் தோட்டத்தில் உயர் மின்கம்பிகள் பொதுமக்கள் வசிக்கும் வீட்டிற்க்கு மேலே தாழ்வான நிலையில் தளர்ந்து இருப்பததால் 2 பேர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் தெரியப்படுத்தினர். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மின் துறை செயற்பொறியாளர் கனி யமுதனிடம் செல்போனில் தெரியப்படுத்தினார். இதை தொடர்ந்து உதவி பொறியாளர் ஜில்பட் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். 2 நாட்களில் தாழ்வான மின்கம்பிகளை சரிசெய்து தருவதாக செயற்பொறியாளர் உத்தரவாதம் அளித்தார். அதை தொடர்ந்து அப்பகுதி எரியாமல் உள்ள அனைத்து மின்விளக்ககளையும் சரிசெய்து தருவதாக இளநிலை பொறியாளர் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News