புதுச்சேரி

அன்னை சிவகாமி மேல்நிலைப்பள்ளி ரூ.26 லட்சத்தில் புனரமைப்பு பணியை சம்பத் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்த காட்சி.

அன்னை சிவகாமி பள்ளியில் புனரமைப்பு பணி- சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-06-22 04:23 GMT   |   Update On 2022-06-22 04:23 GMT
  • முதலியார்பேட்டை அன்னை சிவகாமி மேல்நிலைப்பள்ளி
  • சம்பத் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

முதலியார்பேட்டை அன்னை சிவகாமி மேல்நிலைப்பள்ளி ரூ.26 லட்சத்தில் புனரமைப்பு பணியை சம்பத் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்.

முதலியார்பேட்டையில் அமைந்துள்ள அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை கட்டிடத்தை சீரமைக்கவும், விளையாட்டுத்திடலை மேம்படுத்துவதற்கு ரூ. 26.70 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பூமி பூஜை நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த பூமி பூஜையில் சம்பத் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் பொதுப்பணித்துறையின் சிறப்பு கட்டிடம் கோட்டம்-2 செயற்பொறியாளர் ஸ்ரீதர், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் கோபிநாத், பள்ளி முதல்வர் எழில்கல்பனா மற்றும் ஆசிரியர்கள் கட்டிட ஒப்பந்ததாரர் கெங்காதரன், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News