புதுச்சேரி

கடல் சாகச மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்த காட்சி.

கடல் சாகச மாணவர்களுக்கு ரங்கசாமி வாழ்த்து

Published On 2022-06-16 14:49 IST   |   Update On 2022-06-16 14:49:00 IST
  • காரைக்காலுக்கு பாய் மர படகில் கடல் சாகசமாக சென்று புதுவை திரும்பிய மாணவர்களுக்கு ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
  • இந்த குழுவினருடன் 3 கடல்படை அதிகாரிகளும், 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

புதுவை-தமிழகம் தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள இணைந்து கடந்த 6-ந் தேதி கடல் சாகச பயணத்தை புதுவையில் தொடங்கினர். பயணத்தை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். பயணத்தில் 25 மாணவிகள் உட்பட 60 பேர் பங்கேற்றனர். இந்த குழுவினருடன் 3 கடல்படை அதிகாரிகளும், 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றனர்.

3 பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத்ததான முகாம், மரம் நடுதல், தூய்மைப்பணி திட்டம் என பல சமூக சேவைசார்ந்த நிகழ்வுகளை நடத்தினர்.

கடல் சாகச பயணக்குழுவினர் சுமார் 302 கி.மீ தொலைவினை கடந்த 6-ந் தேதி தொடங்கி நிறைவு செய்தனர். அவர்களை வரவேற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்பட பலர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர். 

Tags:    

Similar News