புற்றுமாரியம்மன் வீதி உலா நேரு எம்.எல்.ஏ., பங்கேற்ற காட்சி.
புற்றுமாரியம்மன் வீதி உலா-நேரு எம்.எல்.ஏ., பங்கேற்பு
- புதுவை சுப்பராய பிள்ளை சத்திரம் நகர் அம்மன் கோவில் வீதியுள்ள உள்ள அரசடி புற்றுமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.
- உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி:
புதுவை சுப்பராய பிள்ளை சத்திரம் நகர் அம்மன் கோவில் வீதியுள்ள உள்ள அரசடி புற்றுமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.
மலர் மாலை, மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஆலய நிர்வாகிகளான ஜெயக்குமார், வித்யாபதி, கதிர் பாலசுப்பிரமணியம், அன்பழகன், ராஜசேகரன், ஆனந்த், மணி, மனோகரன், பன்னீர்செல்வம், குமரவேல்,பரமேஸ்வரி, கங்காதரன், அப்பகுதியை சேர்ந்த பாலு, அன்பழகன், ராஜா, சேவியர், ஜோதிகுமார், இஸ்மாயில், லிகோரின், அலெக்ஸ், அசோக், மகேஷ், சூர்யா, ரஞ்சித், மோகன், ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.