புதுச்சேரி
- புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்க விருதினை செல்வமணிகண்டன், என்ஜினீயர் சபரிநாதன் ஆகியோருக்கு வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து புதுவைத் தமிழ்ச் சங்க விருதினை முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு, அரவிந்த் கல்விக் குழுமத் தலைவர் நித்தியானந்தன், தொழிலதிபர் ராமகிருட்டிணன், ராஜகண்ணு, ஆசிரியர் எட்வர்டு சார்லசு, செல்வமணிகண்டன், என்ஜினீயர் சபரிநாதன் ஆகியோருக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன் தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், பாலசுப்பிரமணியன், தேசிய மரபு அறக்கட்டளை தலைவர் அறிவன், அருள் செல்வன், உசேன், சிவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.