புதுச்சேரி
- தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அளவிலான ஜூடோ போட்டிகள் திருப்பூர் பாரதி வித்யா பவன் பள்ளியில் நடந்தது.
- இதில் தமிழகம், புதுவை, அந்தமான் நிகோபார், தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அளவிலான ஜூடோ போட்டிகள் திருப்பூர் பாரதி வித்யா பவன் பள்ளியில் நடந்தது.
இதில் தமிழகம், புதுவை, அந்தமான் நிகோபார், தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் 36 கிலோ எடை பிரிவில் புதுவையை சேர்ந்த தி ஸ்டடி பள்ளி மாணவர் ரக்ஷன் திறமையை வெளிப்படுத்தி முதல் பரிசாக தங்கம் வென்று சாதனை படைத்தார்.
மாணவரின் சாதனையை தலைமை ஜூடோ பயிற்சியாளர் சென்சாய் ராமமூர்த்தி, பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.