புதுச்சேரி

உலக ஆணழகன் போட்டியில் 4-ம் இடம் பிடித்த புதுவை வீரர் இளஞ்செழியன்.

புதுவை வீரர் 4-ம் இடம் பிடித்து சாதனை

Published On 2022-07-19 04:20 GMT   |   Update On 2022-07-19 04:20 GMT
  • உலக ஆணழகன் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.
  • 65 கிலோ எடைபிரிவில் இளஞ்செழியனுடன் 50 பேர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

தாய்லாந்து நாட்டில் கிராண்ட் சென்டர் பாயிண்ட் டெர்மினல் நகரில் கடந்த 16-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை உலக ஆணழகன் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.

இதில் 25-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியா சார்பில் புதுவை தேங்காய் திட்டை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் பயிற்சியாளர் மணிகண்டன் தலைமையில் பங்கேற்றார். 65 கிலோ எடைபிரிவில் இளஞ்செழியனுடன் 50 பேர் பங்கேற்றனர். இதில் இளஞ்செழியன் 4-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து நாட்டுக்கும் புதுவைக்கும் பெருமை சேர்ந்த இளஞ்செழியனை புதுவை மாநில ஒருங்கிணைந்த அனைத்து விளையாட்டு வீரர்கள் நலச் சங்க தலைவர் இளங்கோவன், துணை தலைவர் மதி ஒளி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News