புதுச்சேரி

சாலையின் தடுப்பு சுவரில் சுவரொட்டிகள்.

சாலையின் தடுப்பு சுவரில் சுவரொட்டிகள்

Published On 2022-10-02 06:34 GMT   |   Update On 2022-10-02 06:34 GMT
  • பொதுப்பணித்துறை சார்பில் தடுப்புச் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு அதில் கருப்பு-வெள்ளையில் இரு வர்ணங்கள் பல லட்சம் செலவில் பூசப்பட்டு அழகுற காணப்பட்டது.
  • அதனால் மீண்டும் போஸ்டர் சில காலம் யாரும் சுவற்ரின் மேல் போஸ்டர் ஒட்டாமல் இருந்தனர்.

புதுச்சேரி:

திருக்கனூர் கடைவீதியில் இரு புறங்களுக்கும் நடுவில் தடுப்புச் சுவர் 1 உள்ளது.

இதனை அழகுப்படுத்தும் விதத்தில் புதுவை அரசின் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்புச் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு அதில் கருப்பு-வெள்ளையில் இரு வர்ணங்கள் பல லட்சம் செலவில் பூசப்பட்டு அழகுற காணப்பட்டது.

அழகாக காணப்படும் தடுப்பு சுவற்றின் மீது போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என பொதுமக்களுக்கு பொது ப்பணித்துறை–யினரும் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனால் மீண்டும் போஸ்டர் சில காலம் யாரும் சுவற்ரின் மேல் போஸ்டர் ஒட்டாமல் இருந்தனர். இதனால் கடைவீதி தடுப்புச் சுவர் அழகாக காணப்பட்டது. ஆனால் கடந்த இரு தினங்களாக அழகாக காணப்பட்ட தடுப்புச் சுவற்றின் மேல் சிலர் பல்வேறு விதமான போஸ்டர்களை ஒட்ட தொடங்கியுள்ளனர்.

அதனால் பல லட்சம் செலவு செய்து வர்ணம் பூசப்பட்ட தடுப்புச் சுவர் அதன் அழகை இழக்கும் நிலை உள்ளது.

மேலும் அரசின் பணம் வீணாகும் சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனைப் போக்க கடை வீதியின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் போஸ்டர்களை ஒட்டுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News