புதுச்சேரி

குறை தீர்ப்பு முகாம் நடந்த போது எடுத்த காட்சி.

போலீஸ் நிலைய மக்கள் குறை தீர்ப்பு முகாம்

Published On 2022-10-11 12:25 IST   |   Update On 2022-10-11 12:25:00 IST
  • பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது சமரசம் செய்யும் வழக்குகளில் குறை தீர்ப்பு முகாம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் நடைபெற்றது.
  • போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு மக்கள் புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டனர்.

புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில், கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு மித்ரன் தலைமையில் ஆரோவில், வானூர், கிளியனூர், கோட்டகுப்பம், மரக்காணம் ஆகிய 5 போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது சமரசம் செய்யும் வழக்குகளில் குறை தீர்ப்பு முகாம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, பாலமுரளி, ராபின்சன் மற்றும் அனைத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு மக்கள் புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டனர்.

இந்த குறை தீர்ப்பு முகாமில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது புகார் தாரர்கள், எதிர் மனுதாரர்கள் ஆஜராகி வழக்குகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து வாதிட்டனர். போலீஸ்துறை அதிகாரிகள் சமரசம் செய்யக்கூடிய புகார் மனுக்களில் சமரசம் செய்து வைத்தனர்.

Tags:    

Similar News