புதுச்சேரி

போக்குவரத்து போலீசார் இறுதி அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட காட்சி.

போலீசார் இறுதி அணிவகுப்பு ஒத்திகை

Published On 2022-08-13 09:24 GMT   |   Update On 2022-08-13 09:24 GMT
  • புதுவை கடற்கரை சாலையில் நாளைமறுநாள் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது.
  • விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றுகிறார்.

புதுச்சேரி:

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது

புதுவை கடற்கரை சாலையில் நாளைமறுநாள் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றுகிறார்.

சுதந்திர தினவிழா இறுதி ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடந்தது. இதில் காவல்துறையினர், தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

தொடந்து சட்ட சபையிலும் ஒத்திகை நடந்தது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதி அறைகள், மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

Tags:    

Similar News