புதுச்சேரி

கிருமாம்பாக்கத்தில் போலீசார்-குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

நள்ளிரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து தேவை

Published On 2023-03-01 14:35 IST   |   Update On 2023-03-01 14:35:00 IST
  • புதுவை தெற்கு பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
  • அக்கூட்டத்தில், பங்கேற்ற குடியிருப்பு வாசிகள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு மதில் சுவர் இல்லாமல் இருப்பதால் சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

புதுச்சேரி:

புதுவை தெற்கு பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் புதியதாக உருவான குடியிருப்பு பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், குடியிருப்பு வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதில், பிள்ளையார்குப்பம் லா பிரான்ஸ் வில்லா, சார்காசிமேடு பெலிக்கான் சிட்டி, கன்னியகோவில் சீனிவாச கார்டன் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை போலீசாரிடம் தெரிவித்தனர்.

அக்கூட்டத்தில், பங்கேற்ற குடியிருப்பு வாசிகள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு மதில் சுவர் இல்லாமல் இருப்பதால் சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

இதனால் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே பகல் நேரத்தை விட இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வெளியூர் நபர்கள் பொதுஇடங்களில் மதுகுடித்து கொண்டு இருக்கிறார்கள்.இதனால் இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமாகி கரடுமுரடாக உள்ளதால் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இது தொடர்பாக குடியிருப்பு நிறுவனத்திடம் தெரிவித்தால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை. எனவே சாலைகளை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க அரசிடம் வியூருத்த வேண்டும். மின்விளக்குகளும் சரிவர எறிவது இல்லை என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

மேலும், இப்பகுதிகளில் இருக்கின்ற குறைகளை சரி செய்வதற்கு உதவி செய்யுமாறும். மேலும் எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடந்தாலும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News