பாகூர் எல்லையில் போலீசார் வாகன சோதனை நடத்திய காட்சி.
பாகூர் எல்லையில் போலீசார் வாகன சோதனை
- புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபானம், சாராயம் கடத்தப்படுகிறது.
- வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபானம், சாராயம் கடத்தப்படுகிறது. அதுபோல் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில், மாநில எல்லையான பாகூர் சோரியாங்குப்பம், கொமந்தான்மேடு பகுதியில் பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் குருவிநத்தம் தூக்கு பாலத்தில், இருசக்கர வாகனங்கள் மற்றும் காரை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்தனர்.
இதில் சந்தேகப்படும் நபர்களை போலீஸ் நிலைத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாகனங்களுக்கு தகுந்த ஆவணங்கள் இல்லையென்றால் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தத் திடீர் வாகன சோதனையால் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையில் போதை பொருட்கள், மதுபானம் எதுவும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.