புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருந்த வார நிறைவு விழா நடைபெற்ற காட்சி.

மருந்தக வார நிறைவு விழா

Published On 2022-09-25 05:02 GMT   |   Update On 2022-09-25 05:02 GMT
  • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருந்த வார நிறைவு விழா மற்றும் மருந்தாளுநர்களுக்கான தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றன.
  • முதல்வர் அனில் பூர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக மதர் தெரேசா மருத்துவ ஆராய்ச்சி நிறுவன முதல்வர் டாக்டர் கோபால் கலந்து கொண்டார்.

புதுச்சேரி:

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருந்த வார நிறைவு விழா மற்றும் மருந்தாளுநர்களுக்கான தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றன.

துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரதீப் திலகன் வரவேற்றார். பிம்ஸ் மருத்துவமனை முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

முதல்வர் அனில் பூர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக மதர் தெரேசா மருத்துவ ஆராய்ச்சி நிறுவன முதல்வர் டாக்டர் கோபால் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் ரேணு, செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருந்தக மேலாளர் அடைக்கல ஜேசுராஜ் உள்ளிட்ட மருந்தாளர்கள் செய்திருந்தனர். ‌முடிவில் டாக்டர் அலீஸ் கிஸ்கு நன்றி கூறினார்.

Tags:    

Similar News