ஒவியப் போட்டி-சாமிநாதன் தொடங்கி வைத்தார்
- இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை புதுவை மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை புதுவை மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 30 தொகுதிகளிலும் ஓவியப்போட்டி நடைபெறுகிறது.
புதுச்சேரி, ஆக.6-
இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை புதுவை மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 30 தொகுதிகளிலும் ஓவியப்போட்டி நடைபெறுகிறது.
காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி வெங்கடா நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும்-மாணவிகளும் கலந்து கொண்டனர்.
ஓவியப் போட்டியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பா.ஜனதா துணைத் தலைவர் ரவிச்சந்திரன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் உமாசங்கர், வர்த்தக பிரிவு மாநில இணை அமைப்பாளர் சீனிவாச பெருமாள், காமராஜ் நகர் தொகுதி மகளிர் அணி தலைவி தனலட்சுமி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓவிய போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.