புதுச்சேரி

கோப்பு படம்.

முதியவர் தவறி விழுந்து சாவு

Published On 2023-01-27 10:28 IST   |   Update On 2023-01-27 10:28:00 IST
  • திருக்கனூரில் முதியவர் தவறி விழுந்து இறந்து போனார். திருக்கனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவருக்கு பூரணி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
  • அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

புதுச்சேரி:

திருக்கனூரில் முதியவர் தவறி விழுந்து இறந்து போனார்.

திருக்கனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 83). இவருக்கு பூரணி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். விஜயராகவன் அப்பகுதியில் உள்ள அங்கன் வாடிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் காலில் அணிந்திருந்த காலணி வழுக்கியதால் தடுமாறி கிழே விழுந்தார்.

உடனே அவரை அதே பகுதியில் வசிக்கும் அவரது மருமகன் மற்றும் உறவினர்கள் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலநின்றி விஜயராகவன் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து அவரது மருமகன் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News