- புதுவையில் 612 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 612 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 35, காரைக்காலில் 3 பேர் என புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 13, காரைக்காலில் 3, மாகியில் ஒருவர் என 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 592, காரைக்காலில் 99, ஏனாமில் 31, மாகியில் ஒருவர் என 723 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவையில் 72, காரைக்காலில் 30, ஏனாமில் 7, மாகியில் ஒருவர் என 110 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை கிருமாம் பாக்கத்தை சேர்ந்த 74 வயது முதியவர் ஜிப்மரில் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 18 லட்சத்து 44 ஆயிரத்து 326 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.