கோவில் இடங்களுக்கு தடையில்லா சான்றிதழ்-கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 3-க்கு உட்பட்ட பெரியபாளையத்தம்மன் கோவில் இடத்திற்கும் வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் தோப்புக்கு உட்பட்ட சின்ன எல்லையம்மன் கோவில் இடத்திற்கும் தடையில்லா சான்றிதழ் அளிக்குமாறு ஆணையர் சிவசங்கரை உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
- நிதி உதவியினை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கோவில்களுக்கு வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 3-க்கு உட்பட்ட பெரியபாளையத்தம்மன் கோவில் இடத்திற்கும் வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் தோப்புக்கு உட்பட்ட சின்ன எல்லையம்மன் கோவில் இடத்திற்கும் தடையில்லா சான்றிதழ் அளிக்குமாறு ஆணையர் சிவசங்கரை உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
பின்னர் ஆணையர் சிவசங்கர், கோவில் மேலாளர் அண்ணாமலை மற்றும் கோவில் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தடை–யில்லா சான்றிதழ் அளிப்பதற்கான ஆவ–ணங்களை செய்து கொடுக்கும்படி எம்.எல்.ஏ. அறிவுறுத்திருந்தார், அதனைத் தொடர்ந்து ஒரு கால பூஜைக்கு நிதி உதவியினை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கோவில்களுக்கு வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.
இதில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய–ராஜ், கிளை செயலாளர் செல்வம், தப்பு, பாலாஜி, ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.