புதுச்சேரி
அதிகாரிகளுடன் நேரு எம்.எல்.ஏ. ஆலோசனை
- நகராட்சி அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தனது அலுவலகத்தில் ஆலோ சனை மேற்கொண்டார்.
- தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் மற்றும் தொடங்கப்பட்ட பணிகள் எப்போது
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தனது அலுவலகத்தில் ஆலோ சனை மேற்கொண்டார்.
ஆலோசனையில் தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் மற்றும் தொடங்கப்பட்ட பணிகள் எப்போது முடிக்கப்படும் எனவும் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனையில் புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் ஞானசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.