புதுச்சேரி
வைரஸ் காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம்
- பருவநிலை மாற்றம் காரணமாக புதுவையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.
- மைய நிர்வாகி மதன் பாபு வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குவதை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
பருவநிலை மாற்றம் காரணமாக புதுவையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.
வைரஸ் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோலை நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் மூலம் வழங்கப்பட்டது. மைய நிர்வாகி மதன் பாபு வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குவதை தொடங்கி வைத்தார்.
தி.மு.க. தொகுதி செயலாளர் சவுரிராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி,தனசேகர் மற்றும் எழிலன், கோபிநாத், நவீன், தங்கராசு ,செந்தில் முருகன், சந்திரன், செல்வராஜ், முருகன், மற்றும் பார்த்திபன், ஸ்ரீகாந்த், கார்த்திகேயன், குமரன், ஜவகர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.