புதுச்சேரி

தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-12-28 10:18 IST   |   Update On 2022-12-28 10:18:00 IST
  • புதுவை அமெச்சூர் யோகா மற்றும் விளையாட்டு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்திய யோகா கூட்டமைப்பு 41-வது தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் 2022-23 தொடக்க விழா 26-ந் தேதி வாணரப்பேட்டையில் உள்ள அமலோற்பவம் பள்ளி முதன்மை கட்டிடத்தில் நடைபெற்றது.
  • இதில் புதுவை அமெச்சூர் யோகா மற்றும் விளையாட்டு சங்க பொதுசெயலாளர் ரகுமான், தலைவர் டாக்டர்.

புதுச்சேரி:

புதுவை அமெச்சூர் யோகா மற்றும் விளையாட்டு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்திய யோகா கூட்டமைப்பு 41-வது தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் 2022-23 தொடக்க விழா 26-ந் தேதி வாணரப்பேட்டையில் உள்ள அமலோற்பவம் பள்ளி முதன்மை கட்டிடத்தில் நடைபெற்றது.நாளை வரை போட்டி நடக்கிறது.

போட்டியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதில் புதுவை அமெச்சூர் யோகா மற்றும் விளையாட்டு சங்க பொதுசெயலாளர் ரகுமான், தலைவர் டாக்டர். ஆரோக்கியராஜ் சீசர் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன், அமலோற்பவம் பள்ளி நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் லூர்து சாமி இந்திய யோகா கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் புரோஹித், இந்திய யோகா கூட்டமைப்பு ஜெனரல் மிருணாள் காந்தி, சக்ரவர்த்தி, யோகா விளையாட்டு போட்டி தலைவர் கோவிந்தராஜ், சென்னை யோகா விளையாட்டு மேம்பாட்டு சங்க தலைவர் முருகன், மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் ராகேஷ், லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News