புதுச்சேரி
முத்துரத்தினம் அரங்கம் பள்ளி மாணவிகள் சாதனை
- புதுவை மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.
- இப்போட்டியில் புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் 17 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் அப்பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி அஷிதா முதல் பரிசும், 13 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் 7-ம் வகுப்பு மாணவிகள் பிரஜூஷா மற்றும் சின்மயா ஆகியோர் 2-ம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மற்றும் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.