புதுச்சேரி

இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளை கராத்தே சுந்தர்ராஜன் பாராட்டிய போது எடுத்தபடம்.

முத்துரத்தினம் அரங்கம் பள்ளி மாணவிகள் சாதனை

Published On 2023-01-31 05:02 GMT   |   Update On 2023-01-31 05:02 GMT
  • புதுவை மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.
  • இப்போட்டியில் புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

புதுவை மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 17 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் அப்பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி அஷிதா முதல் பரிசும், 13 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் 7-ம் வகுப்பு மாணவிகள் பிரஜூஷா மற்றும் சின்மயா ஆகியோர் 2-ம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர்.

சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மற்றும் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News