மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.
null
முத்துரத்தினம் பள்ளியில் பொங்கல் விழா
- புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்கம் மாநில செயலாளர் கராத்தே சுந்தரராஜன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார் தலைமை விருந்தினராக புதுவை தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் பாலசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். புதுவை மாநில ஒலிம்பிக் சங்க துணை தலைவர்வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் பொங்கல் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து வாழ்த்துரை வழங்கினார்.
புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்கம் மாநில செயலாளர் கராத்தே சுந்தரராஜன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளியில் கோலப் போட்டி நடைபெற்றது.
மேலும் புது பானையில் பொங்கலிட்டு மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று கூறி மகிழ்ந்தார்கள்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளி மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின், ஆசிரியர் ஜெனிபர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.