புதுச்சேரி

கோப்பு படம்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-09-13 10:52 IST   |   Update On 2022-09-13 10:52:00 IST
  • புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 72)சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை தலைமை செயலகம் அருகே நிறுத்தி விட்டு கடற்கரை சாலைக்கு சென்றார்.
  • லோக நாதன் பெரிய கடை போலீசில் புகார் செய்தார்.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 72)சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை தலைமை செயலகம் அருகே நிறுத்தி விட்டு கடற்கரை சாலைக்கு சென்றார்.

பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் லோகநாதன் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து லோக நாதன் பெரிய கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News