புதுச்சேரி

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.

எம்.ஐ.டி கல்லூரியில் தடகள போட்டி பரிசளிப்பு விழா

Published On 2022-12-01 04:59 GMT   |   Update On 2022-12-01 04:59 GMT
  • புதுவை மதகடிபட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தடகள விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
  • இந்த போட்டியில் கல்லூரியின் அனைத்து துறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை மதகடிபட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தடகள விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள்.

மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மலர்கண் வரவேற்புரையாற்றினார். இந்த போட்டியில் கல்லூரியின் அனைத்து துறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் இடத்தை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் மாணவர்கள் தட்டி சென்றனர். வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரியின் முதல்வர் மலர்கண் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், முதலாம் ஆண்டு துறை தலைவர்கள் டாக்டர் பூங்குழலி, சுமித்ரா, மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சகான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குனர் மோகன் செய்திருந்தார்.

Tags:    

Similar News