புதுச்சேரி

காலி டப்பாக்களுடன் பால் முகவர்கள் போராட்டம் நடத்திய காட்சி.

பால் முகவர்கள் போராட்டம்

Published On 2022-10-11 12:42 IST   |   Update On 2022-10-11 12:42:00 IST
  • பாண்லே பால் விற்பனை தொழிலாளர்களுக்கு எவ்வித காரணம் இன்றி விற்பனைக்கான பாலின் அளவை கடந்த ஒரு வார காலமாக குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.
  • வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தில் பால் பாக்கெட்களை வாங்கக்கூடிய நிலையை பாண்லே நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி:

பாண்லே பால் விற்பனை தொழிலாளர்களுக்கு எவ்வித காரணம் இன்றி விற்பனைக்கான பாலின் அளவை கடந்த ஒரு வார காலமாக குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பால் பாக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தில் பால் பாக்கெட்களை வாங்கக்கூடிய நிலையை பாண்லே நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.

இதனை கண்டித்தும் தட்டுப்பாடு இல்லாமல் பால் விற்பனையாளர்களுக்கு பால் பாக்கெட் வழங்க வலியுறுத்தி ஏ .ஐ. டி .யு .சி. பாண்லே முகவர்கள் காலி பால் டப்பாக்களுடன் இன்று காலை மிஷின் வீதி மாதா கோவில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ. ஐ.டி. யு. சி. பாண்லே பால் விற்பனை தொழிலாளர் சங்க தலைவர் கலைமணி, செயலாளர் முருகன், பொருளாளர் கதிரேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ. ஐ. டி. யு. சி. பொதுச் செயலாளர் சேது செல்வம், செயல் தலைவர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாண்லே பால் விற்பனை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பாலாஜி, ஆறுமுகம், பாலச்சந்தர், விஜய், முத்து, முருகேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News