புதுச்சேரி

மண்டலாபிஷேக விழா நடைபெற்ற காட்சி.

பல்கலைக்கழக கோவிலில் மண்டலாபிஷேக விழா

Published On 2022-11-02 11:32 IST   |   Update On 2022-11-02 11:32:00 IST
  • புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள வலம்புரி வித்யா விநாயகர் கோவில் 34 ஆண்டுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
  • விழாவில் பல்லைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள வலம்புரி வித்யா விநாயகர் கோவில் 34 ஆண்டுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மண்டலாபிஷேக விழா நடந்தது.இதன் நிறைவு விழா கணபதி ஹோமம், யாக வேள்வி, கடம் புறப்பாடு, சங்காபிஷேகம் ஆகியவை நடந்தது. துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை தாங்கி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பிரசாதம் வழங்கினார்.

விழாவில் பல்லைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News