புதுச்சேரி

மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடந்த காட்சி.

மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி-முதலாம் ஆண்டு தொடக்க விழா

Published On 2022-08-05 09:11 GMT   |   Update On 2022-08-05 09:11 GMT
  • புதுவை மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடக்க விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.
  • இந்த விழாவில் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் காஞ்சனா வரவேற்புரையாற்றினார்.

புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடக்க விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்திலன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தனசேகரன் வழிகாட்டுதல் பேரிலும், மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் செயலர் டாக்டர் நாராயணசாமி ஆகியோரின் வாழ்த்துக்களுடன் நடைபெற்றது. இந்த விழாவில் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் காஞ்சனா வரவேற்புரையாற்றினார். மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதல்வர் மலர்க்கண் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியின் பதிவாளர் தட்ஷிண மூர்த்தி, துறைத் தலைவர்கள் ஜெயகாந்தன், பத்மநாபன், சுரேஷ்குமார், ஜெகதீசன், பேராசியரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். விழாவில் இந்த ஆண்டு அரசு வாரியத் தேர்வில் மின்னியல் துறையை சார்ந்த சபரீஷ் 700-க்கு 696 மதிப்பெண் பெற்றும், மெக்கானிக்கல் துறையை சார்ந்த கிருஷ்ணா என்ற மாணவர் 700-க்கு 694 மதிப்பெண் பெற்றும், கம்ப்யூட்டர் துறையை சார்ந்த விக்னேஷ் 700-க்கு 692, மெக்கானிக்கல் துறையை சார்ந்த விஷால் 700-க்கு 691 மதிப்பெண் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடி தந்தனர். அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டர். நிகழ்ச்சியின் முடிவில் மின்னியல் துறைத்தலைவா ஜெயகாந்தன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News