புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

null

விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-14 14:51 IST   |   Update On 2022-12-14 14:52:00 IST
  • அம்பேத்கர் உருவப்படத்துக்கு காவி பூசி திருநீறிட்டு தமிழகத்தில் இந்து அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.
  • போராட்டத்தில் இந்து அமைப்புகள், சங் பரிவார் அமைப்புகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

புதுச்சேரி:

அம்பேத்கர் உருவப்படத்துக்கு காவி பூசி திருநீறிட்டு தமிழகத்தில் இந்து அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த சம்பவத்தை கண்டித்து அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முதன்மை செயலர் தேவபொழிலன் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் தமிழ்மாறன், முன்னவன், செல்வநந்தன், அரிமாதமிழன், ஆதவன், எழில்மாறன், கார்முகில், சுடர்வாளன், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் தலையாரி, துணை அமைப்புகளின் மாநில செயலர்கள் தமிழ்வாணன், தமிழ்வளவன், அகன், திருக்குமரன், இளவரசன், அலெக்சாண்டர் மற்றும் தொகுதி செயலாளர்கள், மகளிர் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

முடிவில் உப்பளம் தொகுதி செயலாளர் கன்னியப்பன் நன்றி கூறினார். போராட்டத்தில் இந்து அமைப்புகள், சங் பரிவார் அமைப்புகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News